Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD

ஆஸ்திரேலியாவின் கோட்டையை தகர்த்தது இந்தியாவின் இளம் படை

பிரசுரிக்கபட்ட திகதி: 19/01/2021 (செவ்வாய்க்கிழமை)

இந்தப் போட்டியில் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இந்த போட்டியில் வென்றதன் மூலம், நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் இந்தியா தனதாக்கியுள்ளது.

இந்த வெற்றி மூலம் ஐசிசி-இன் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையிலும் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்த மாபெரும் வெற்றியைப் பாராட்டி இந்திய அணிக்கு ஐந்து கோடி ரூபாய் பரிசு தொகையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ஓர் இளம் அணி ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலிய மண்ணிலேயே வீழ்த்தியுள்ளது வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் என்று பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

அனுபவம் இல்லாத பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்

இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்தியா சார்பில் களமிறங்கிய பந்துவீச்சாளர்கள் போதுமான அளவுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள் என்றாலும், போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தியது சமூக ஊடகங்களில் பரவலான பாராட்டை பெற்றது.

இந்த போட்டியில், இந்திய பந்துவீச்சாளர்களிலேயே அதிக டெஸ்ட் அனுபவம் கொண்ட பந்துவீச்சாளர் என்றால் அவர் மொஹம்மத் சிராஜ் தான். பேட்டிங்கைப் பொறுத்தவரை இந்தியாவின் நட்சத்திர பேஸ்மேனான விராட் கோலி பங்குபெறவில்லை.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

"எனக்கு ஏமாற்றமாக உள்ளது; ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் உயிர்ப்புடனும் நல்ல நிலையிலும் உள்ளது. (ரிஷப்) பந்த்-இன் இன்னிங்ஸ் ஹெடிங்லேவில் பென் ஸ்டோக்ஸ் ஆடிய ஆட்டத்தை எனக்கு நினைவூட்டியது," என்று இந்தப் போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் பிபிசியின் 5 லைவ் ஸ்போர்ட்ஸ் எக்ஸ்ட்ரா வானொலி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

வரலாற்று வெற்றி - பாராட்டிய சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை
படக்குறிப்பு,

சுந்தர் பிச்சை

இந்திய அணி பெரியளவில் நட்சத்திர ஆட்டக்காரர்கள் இல்லாமல் இந்த போட்டியில் களமிறங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அணியோ அதற்கு நேரெதிர்மறையாக நட்சத்திர பட்டாளத்துடன் களம் கண்டது.

பிரிஸ்பேனின் கப்பா மைதானம் ஆஸ்திரேலியாவின் கோட்டை எனலாம். அந்த மைதானத்திலேயே அவர்களை டெஸ்ட் போட்டியில் வீழ்த்துவது என்பது அத்தனை எளிதான காரியமல்ல.

கடந்த 32 ஆண்டுகளில் நடந்த 32 டெஸ்ட் போட்டிகளில், ஆஸ்திரேலியா இரு இன்னிங்ஸ்களிலும் தன் 10 விக்கெட்டுகளை இழந்தது மூன்று போட்டிகளில் மட்டுமே.

அதில் தற்போது நடந்து முடிந்த போட்டியும் அடக்கம். அதே போல கடந்த 32 ஆண்டுகளில் கப்பா மைதானத்தில் ஒரு போட்டியில் கூட ஆஸ்திரேலியா தோற்றதில்லை என்பது நினைவுகூரத்தக்கது. இவைகளை எல்லாம் தாண்டி தற்போது இந்தியா தன் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

இந்த டெஸ்ட் தொடரில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய பந்துவீச்சாளர் மொஹம்மத் சிராஜ் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்திய அணியின் வெற்றி குறித்து தமிழகத்தை பூர்விகமாக கொண்டவரும், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியுமான சுந்தர் பிச்சை, "மிகச் சிறப்பான டெஸ்ட் தொடர் வெற்றிகளில் இதுவும் ஒன்று. இந்திய அணிக்கு வாழ்த்துகள். ஆஸ்திரேலிய அணியும் நன்றாக ஆடியது" என்று ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் வெற்றி எப்படி சாத்தியமானது?

Ind Vs Aus டெஸ்ட் தொடர்

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 369 ரன்களை எடுத்திருந்தது. மார்னஸ் 108 ரன்களையும், கேமருன் க்ரீன் 47 ரன்களையும், மேத்யூ வேட் 45 ரன்களையும், டிம் பெயின் 50 ரன்களையும் விளாசினர்.

நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்தியா 336 ரன்களை எடுத்தது. ரோஷித் சர்மா 44 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களையும், ஷர்துல் தாக்கூர் 67 ரன்களையும் அடித்தனர். இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பிய போது, சுந்தர் மற்றும் ஷர்துல் இணை, நிலைத்து நின்று ஆடி ரன் குவித்தற்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை, ஹேசில்வுட் ஐந்து விக்கெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

நான்காவது நாளான நேற்று (ஜனவரி 18) ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸை 294 ரன்களுக்கு முடித்து வைத்தது இந்தியா. டேவிட் வார்னர் 48 ரன்களையும், ஸ்டீவன் ஸ்மித் 55 ரன்களையும் அடித்தனர்.

19.5 ஓவர்களை வீசி 73 ரன்களைக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் மொஹம்மத் சிராஜ். இதில் 5 ஓவர்கள் மெய்டன் வீசப்பட்டதும் அடக்கம்.

ஷர்துல் தாக்கூரும் தன் பங்குக்கு 19 ஓவர்களை வீசி 61 ரன்களைக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

328 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கி இரண்டு ஓவர்களைக் கூட முழுமையாக எதிர்கொள்ளவில்லை, அதற்குள் மழை வந்து ஆட்டம் தடைபட்டது. அப்படியே அன்றைய நாளும் முடிவுக்கு வந்தது.

நான்காவது நாள் முடிவில் இந்தியா 1.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி நான்கு ரன்களை எடுத்திருந்தது.ஐந்தாவது மற்றும் கடைசி நாளான இன்று (ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை) மீண்டும் ரோஹித் சர்மா, சுப்மன் கில் இணை களமிறங்கியது.

கம்மின்ஸ் வீசிய 9-வது ஓவரில் ரோஹித் சர்மா தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்து வந்த புஜாரா விக்கெட்டை எளிதில் இழக்காமல் நிதானம் காட்டினார்.புஜாரா - கில் இணை அழுத்தமாக பிரிஸ்பேன் மைதானத்தில் காலூன்றியது. 240 பந்துகளை எதிர்கொண்டு 114 ரன்களைக் குவித்தது இந்த இணை. சுப்மன் கில் 91 ரன்களை எடுத்து லயோன் வீசிய 48-வது ஓவரில் தன் விக்கெட்டை இழந்தார். அப்போது இந்தியா 132 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அடுத்து அஜிங்க்யா ரஹானே களமிறங்கினார். 24 ரன்கள் எடுத்திருந்தபோது கம்மின்ஸின் பந்தில் அவர் ஆட்டமிழந்தார். 167-க்கு 3 விக்கெட் இழந்தது இந்தியா.மறு பக்கம் புஜாரா தன் விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தார். ரிஷப் பண்ட் - புஜாரா உடன் கை கோர்த்து நிலைத்து நின்று ஆடினார். இந்த இணை 141 பந்துகளை எதிர்கொண்டு 61 ரன்களைக் குவித்தது. புஜாரா தன் அரை சதத்தைப் பதிவு செய்தார்.

Ind Vs Aus டெஸ்ட் தொடர்

81-வது ஓவரில் கம்மின்ஸின் பந்தில் 56 ரன்களோடு பெவிலியன் திரும்பினார் புஜாரா. அப்போது இந்தியா 228-க்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அடுத்து களமிறங்கிய மயங்க் அகர்வால் ஒன்பது ரன்களில் கம்மின்ஸ் வீசிய 87-வது ஓவரில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 22 ரன்களுக்கு லயோன் வீசிய 96-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். ஷர்துல் தாக்கூர் 2 ரன்களுக்கு தன் விக்கெட்டை இழந்தார். இந்தியா 325-க்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் மறுபக்கம் ரிஷப் பண்ட் 138 பந்துகளுக்கு 89 ரன்களை குவித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர்களில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், லயோன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அதிரடி காட்டினர். இருப்பினும், அது அந்த அணியின் வெற்றிக்கு வித்திடவில்லை.நான்கு போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் வென்று ஒரு போட்டியை டிரா செய்து வென்றிருக்கிறது இந்தியா.




மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017