Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD

டெல்லி வன்முறை: உயிரிழப்பு 7-ஆக உயர்வு

பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2020 (செவ்வாய்க்கிழமை)

இந்த வன்முறைகளில் 35க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டங்களுக்குப் பிறகு டெல்லியின் சாந்த் பாக், பஜன்புரா, பிரிஜ்புரி, கோகுல்புரி மற்றும் ஜாஃப்ராபாத் ஆகிய பகுதிகளில் பதற்றச் சூழல் காணப்படுகிறது.

டெல்லியில் நடந்த வன்முறையில் காவல் துறையைச் சேர்ந்த ஒருவரும் பொதுமக்களில் ஆறு பேர் இறந்துள்ளதாகவும் டெல்லி போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

இந்த வன்முறைகளில் 35க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டங்களுக்குப் பிறகு டெல்லியின் சாந்த் பாக், பஜன்புரா, பிரிஜ்புரி, கோகுல்புரி மற்றும் ஜாஃப்ராபாத் ஆகிய பகுதிகளில் பதற்றச் சூழல் காணப்படுகிறது.

டெல்லியில் நடந்த வன்முறையில் காவல் துறையைச் சேர்ந்த ஒருவரும் பொதுமக்களில் ஆறு பேர் இறந்துள்ளதாகவும் டெல்லி போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நேர்மறையாக இருந்தது: கேஜ்ரிவால்

"எல்லோரும் டெல்லி வன்முறை ஓய வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். உள்துறை அமைச்சர் (அமித்ஷா) சந்திப்பு ஒன்று அழைப்பு விடுத்திருந்தார். அந்த சந்திப்பு நேர்மறையாக இருந்தது. எல்லா அரசியல் கட்சிகளும் நகரில் அமைதி திரும்புவதை உறுதி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது". என்று அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாகத் தெரிவித்துள்ளது ஏ.என்.ஐ.

கோகுல்புரியில் டயர் கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதால், அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் சிலர் கற்களை குவித்து வைத்து எறிவதை காண முடிகிறது என பிபிசி செய்தியாளர் ஃபைசல் கூறுகிறார். மேலும் பாலம் ஒன்றின் மேல் நின்று நடப்பதை கவனித்து கொண்டிருந்த சில செய்தியாளர்கள் மீது கல் எறியப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். இதற்கிடையில் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கங்களும் கேட்டன.

தற்போது மீட் நகர் அருகில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் மூவர்ண கொடி ஏந்தியபடி வீதியில் பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம் முழக்கமிட்டு செல்கின்றனர். இந்த கூட்டத்தில் சில காவி நிற கொடிகளையும் காண முடிந்தது என பிபிசி செய்தியாளர் ஃபைசல் கூறுகிறார்.

சாந்த்பாக், ஜாஃபராபாத் மோஜ்பூர், பஜன்புரா உள்ளிட்ட டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் திங்கள்கிழமை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது 2 மணி அளவில் பஜன்பூரா பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே மீண்டும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன.

Presentational grey line

அமித் ஷா, அரவிந்த் கேஜ்ரிவால் அவசரக் கூட்டம்

 

டெல்லி வன்முறை

 

படத்தின் காப்புரிமை

இந்நிலையில், டெல்லியில் நடக்கும் வன்முறைகள் குறித்து தாம் மிகுந்த கவலை கொண்டிருப்பதாகவும், டெல்லியில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் அவசரக் கூட்டத்தை இன்று காலையில் கூட்டினார்.

இந்த கூட்டத்துக்கு பிறகு பேசிய அவர், ''அமைதி காக்க வேண்டுமென டெல்லி மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன். வட கிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை குறித்து கவலை கொண்டுள்ளோம். இந்த வன்முறை சம்பவத்தில் போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர். சிலர் இறந்துள்ளனர். பல கடைகள் மற்றும் வீடுகள் சூறையாடப்பட்டு கொளுத்தப்பட்டன. இது துரதிஷ்டவசமானது'' என்று தெரிவித்தார்.

அரவிந்த் கேஜ்ரிவால் அவசரக் கூட்டம்

படத்தின் காப்புரிமை

''பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பவ இடங்களில் போதுமான போலீசார் இல்லையென்றும், உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வரும்வரை போலீசாரால் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என்றும் என்னிடம் தெரிவித்தனர்'' என்று மேலும் கூறினார்.

முன்னதாக, டெல்லி காவல் அதிகாரிகள், மத்திய உள்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள் பின்னிரவில் அவசரமாக ஆலோசித்திருந்தார்.

டெல்லி காவல் துறை டெல்லி அரசின்கீழ் இல்லாமல், மத்திய உள்துறையின் கீழ் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

டெல்லி வன்முறை

 

மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் மற்றும் அதிகாரிகளுடன் இன்று இன்னொரு கூட்டத்தையும் நடத்தவுள்ளார்.




மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017