Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD

இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகள் உடல்களை புதைக்க இடம் தரமறுக்கும் உலமா சபை

பிரசுரிக்கபட்ட திகதி: 29/04/2019 (திங்கட்கிழமை)

இலங்கை

படத்தின் காப்புரிமை

இலங்கை சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு மரணித்த எவருடைய உடல்களையும் தமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது என்றும் அந்த சடலங்களை தமது பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்ய இடமளிக்கப் போவதில்லை எனவும் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் உலமா சபை அறிவித்துள்ளது.

சாய்ந்தமருது வர்த்தக சபை மற்றும் பொதுமக்களுடன் இணைந்து இந்த அறிவித்தலை விடுப்பதாகவும் ஜும்ஆ பள்ளிவாசல் உலமா சபையினர் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது தீவிரவாதிகள் ஏப்ரல் 26 அன்று இரவு துப்பாக்கி பிரயோகம் செய்தனர். பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 6 தற்கொலை குண்டுதாரிகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் நடந்த சோதனையில் ஏராளமான ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் நடத்திய ஊடக சந்திப்பில். இந்த சம்பவத்தில் இறந்த தீவிரவாதிகளின் சடலங்களை தங்கள் மையவாடிகளில் அடக்கம் செய்ய அனுமதிப்பதில்லை என்ற முடிவை சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் உலமா சபையினர் வெளியிட்டனர்.

இலங்கை

"பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு இப்பிரதேசத்தில் என்றுமில்லாதவாறு அமைதியின்மையை ஏற்படுத்திய நபர்கள் எவரின் உடல்களையும் எமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது. மேலும், அந்த சடலங்களை இப்பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்யவும் இடமளிக்கமாட்டோம்." என்று அவர்கள் தெரிவித்தனர்.

"ஸியாரம் (புனிதர்களை அடக்கம் செய்த இடம்) அமைந்துள்ள பள்ளிவாசல்களை இலக்கு வைத்து விஷமிகளின் தாக்குதல் நடைபெறலாம் என போலீஸார் எம்மை எச்சரித்ததற்கு அமைய, நாம் ஸியாரம் அமைந்துள்ள எமதுபள்ளிவாசல்களை பாதுகாக்கும் பல நடவடிக்கைகளை முடுக்கியிருந்தோம்." என்றனர்.

ஏற்கனவே சுனாமியால் பாதிக்கப்பட்டு தமது உறவுகளையும், சொத்துக்களையும் இழந்து, மீள் குடியேறியுள்ள இம் மக்களை, மீண்டும் துயரத்தில் ஆழ்த்தியிருப்பது மோசமான ஒன்று என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

வீடுகளுக்கு செல்ல அச்சப்படும் மக்கள்

சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில், தமது வீடுகளிலிருந்து வெளியேறிய அந்தப் பகுதி மக்களில் கணிசமானோர், இன்னும் அவர்களுடைய வீடுகளுக்குத் திரும்பவில்லை. வேறுவழிகளின்றி, வீடு திரும்பியவர்களும் - கடும் அச்சத்துடனேயே காணப்படுகின்றனர்.

சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் வாடகைக்குத் தங்கியிருந்தவர்களில் - குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 15 பேர், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பங்களில் உயிரிழந்தனர்.

போலிஸ் காவல்

அந்த சம்பவம் நடந்த வீட்டினுள்ளும் சுற்றுப்புறங்களிலும் காணப்பட்ட சடலங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. அங்கு காணப்பட்ட தடயப் பொருட்களை போலீஸார் எடுத்துச் சென்றுள்ளார்கள். வீட்டின் முன்பாக போலீஸார் காவலில் உள்ளனர்.

சம்பவம் நடந்த வீட்டின் முன்னாலுள்ள வீதியில், குண்டு வெடிப்பின் போது உடைந்து சிதறிய பொருட்களின் பகுகள் இன்னும் காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு - மேற்படி பயங்கரவாதச் சம்பவங்கள் நடந்ததை அடுத்து, தமது வீடுகளிலிருந்து வெளியேறிய அந்தப் பகுதி மக்களில் கணிசமானோர், இன்னும் தமது வீடுகளுக்குத் திரும்பவில்லை. வேறு வழிகளின்றி தமது வசிப்பிடங்களுக்குத் திரும்பியதாக சிலர் பிபிசியிடம் கூறினார்கள். அதிர்ச்சியும், பயமும் இன்னும் விலகாத நிலையிலேயே அவர்கள் உள்ளனர்.

தமது வாழ்நாளில் இவ்வாறான சம்பவத்தை முதன் முதலாகக் கண்டதாக, அங்குள்ள பலர் கூறுகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர், தனது அடையாள அட்டையை எடுத்துச் செல்லாமலேயே, சாய்ந்தமருதிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வரை, பணித்துத் திரும்பியதாகக் கூறும் இப்பகுதிவாசி ஒருவர், இப்போது அடையாள அட்டை இன்றி வெளியேற முடியாத பாதுகாப்புக் கெடுபிடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறான குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னர் தமது சுதந்திரம் பறிபோய் விட்டதாகவும் பிபிசி யிடம் கவலை தெரிவித்தார்.

இதேவேளை, தமது ஊரில் இவ்வாறானதொரு சம்பவம் நடந்துள்ளதால் அங்குள்ள மக்கள் கடுமையான கவலையுடனும், கோபத்துடனும் காணப்படுகின்றனர்.




மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017